Telugu First Newspaper Facts?

Telugu First Newspaper Facts? முதன் முதலில் தெலுங்கில் செய்தித்தாள் எப்போது தொடங்கப்பட்டது யாரால் தொடங்கப்பட்டது?

முதல் தெலுங்கு செய்தித்தாள் கிருஷ்ணா பத்திரிக்கை ஆகும், இதனை இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கொண்ட வெங்கடப்பய்யாவால் நிறுவப்பட்ட தெலுங்கு மொழி செய்தித்தாள் ஆகும்.

கிருஷ்ணா பத்திரிக்கை 1902 இல் மச்சிலீப்பட்டினத்தில் தொடங்கப்பட்டது, பிப்ரவரி 2, 1902 ஆம் ஆண்டு நிறுவனர் கொண்டா வெங்கடப்பையா மற்றும் தாசு நாராயண ராவ் ஆகியோரால் வார இதழாக வெளியிட தொடங்கியது.

வெங்கடப்பையா 1905 வரை எடிட்டராக பணியாற்றினார், அதன்பின் கிருஷ்ணராவ் தலைவராக பொறுப்பை ஏற்றார்.

இப்பொழுது வரை சுமார் 121 ஆண்டுகளாக கிருஷ்ண பத்திரிக்கை வெளியிடப்பட்டு வருகின்றது, இப்பொழுது 2023 செய்தித்தாள் விஜயவாடாவில் வெளியிடப்படுகிறது.